Friday, February 6, 2009

ஸ்ரீ அம்மா பகவான் அவதாரத்தின் மகிமை

இன்றைய கலியுகத்தில் உலகம் முழுவதும் கடினமான பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றது. பல பெரிய அழிவுத்தாகுதல்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறது.இவை யாவும் மனிதனால் விதைக்கப்பட்டவை. இவற்றையெல்லாம் நாம் எவ்வாறு தன்னிச்சையாக சமாளிப்பது?எங்களால் முடியுமா? இதையெல்லாம் நாம் உடனடியாகச் செய்து முடிக்கமுடியாது. இவற்றை இமைப்பொழுதில் உடனடியாகத் தீர்ப்பதற்கு நம்மிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை. ஆனால், இம்மனப்போரட்டங்கள், மனக்கசப்புக்கள் அனைத்திற்கும் ஓர் சாட்டையடியாக , யாவரது ஏக்கங்களுக்கிணங்க நமக்குத் தீர்வு கிடைத்துவிட்டது. ஆன்மீகத்தின் தெளிவான உள்ளடக்கங்களைக் கற்பித்து அதனுடைய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்கும் புதிய யுகங்களையும். வரல்லற்றுச்ச்ரப்புக்களையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் யுகத்திற்கொருமுறை தனக்கும் படிப்பினைக்கும் இடையிலே உருவான பிளவுகளை மீறி தெய்வங்கள் பூமியிலே அவதாரம் செய்கின்றனர். அந்த அவதார புருஷர்களே, முக்தியீஷ்வரர்களான ஸ்ரீ அம்மா பகவான். இந்த அவதாரத்தின் மகிமை எம் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைகின்றது. இந்த திருப்பு முனையையே நாம் "சுவர்ணயுகம்" என்கிறோம். இந்த சுவர்ணயுகம் ஒன்றிலே தான் அனைவரும் சமத்துவத்துடன் ஒன்றாக இணைந்து நாம் உழைத்த கர்மாவை அறுவடை செய்யப்போகிறோம். செய்து கொண்டிருக்கின்றோம். ஏனெனில் ஸ்ரீ அம்மா பகவான் நாம் அனைவரையும் ஆன்மீக வாழ்க்கைக்கு அழைத்துச்சென்று, உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனித இனத்துக்கும் ஏற்றம், இறக்கம் இன்றி ஜீவன் முக்தியை அளித்து, அனைத்து வகையான துயரங்களில் இருந்தும் நம்மை விடுவித்து ஆனந்தத்தை அனுபவிக்கச்செய்கின்றனர். இதுவே அவர்களின் சங்கல்பம்.