Saturday, February 21, 2009

ஸ்ரீ அம்மா பகவானின் வரதீட்சை மாலை தரிசனம்!!!

ஸ்ரீ அம்மா பகவான் தெய்வீக அவதாரம் என்பதை இலட்சோப லட்சம் மக்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் மூலமாக உணர்ந்திருக்கிறார்கள்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ அம்மா பகவான் சத்தியலோகம் என்னும் இடத்தில் பொது மக்களுக்கு தரிசனம் அளிக்கிறார்கள்.வரதீட்சை மாலை அணிந்து அவர்களைத் தரிசிப்பது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். வருடத்திற்கு ஒரு முறை ஸ்ரீ அம்மா பகவான் உலக மக்களின் துயரினைப் போக்கும் நோக்கத்துடன் அனைவருக்கும் தரிசனம் அளித்து வருகிறார்கள்.தீட்சை என்பது இறையருள் நம்மை வந்தடையும் ஒரு செயல் முறையைக் குறிக்கிறது.தம்மைத் தரிசிக்க வரும் மக்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வரத்தை அளிக்கும் ஸ்ரீ அம்மா பகவானின் கருணையைக் குறிக்கிறது இந்த வரதீட்சை மாலை.இந்த மாலையை 21 அல்லது 16 அல்லது 7 நாட்கள் அணிந்து கொள்வதன் மூலம் ஸ்ரீ அம்மா பகவானிடம் ஒரு புனித பந்தம் ஏற்படுகிறது. அந்த பந்தம், நாம் அம்மா பகவானின் வரத்தைப் பெற உதவுகிறது.மனிதன் அனுபவிக்கும் துயரங்களுக்கெல்லாம் காரணம் அவனது ஆழ்மனதில் உள்ள காயங்களும் அதனால் உருவாகும் மனப்போராட்டங்களும்தான்.ஸ்ரீ அம்மா பகவானைத் தரிசிக்கும் பொழுது இந்த மனக் காயங்கள் ஆறுகின்றன. மனம் அமைதியடைகிறது. அதனால் தெய்வீக அருள் வேகமாக நம்மை வந்தடைகிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து முக்கியமான் தேவைகள் இருக்கின்றன. முதலாவது ஐஸ்வர்யம் அதாவது செல்வம், இரண்டாவது ஆரோக்கியம், மூன்றாவது உறவு முறைகள், நான்காவது குழந்தைகளின் எதிர்காலம், ஐந்தாவது மன அமைதி. இந்த ஐந்தும் ஸ்ரீ அம்மா பகவான் தரிசனத்தின் மூலம் கிடைக்கும்.அதற்காகத்தான் இந்த வரதீட்சை மாலை தரிசனம். மேலும் ஸ்ரீ அம்மா பகவான் தங்களைக் கடவுள் என்று முதல் முறையாக மக்களுக்கு உணர்த்திய இடமே "சத்யலோகம்" என்னும் திருத்தலம்.சத்தியலோகத்தில் நடைபெறும் ஸ்ரீ அம்மா பகவானின் வரதீட்சை மாலை தரிசனம் பெற்று, உங்கள் பிரச்சனைகளிலிருந்து வெளிவாருங்கள். மேலும் விரும்பும் ஒரு வரமும் பெற்றுச் செல்லுங்கள்.***********************************************************"ஓம் சச்சிதானந்த பரப்பிரம்ம புருஷோத்தம பரமாத்மா, ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ

Friday, February 6, 2009

ஸ்ரீ அம்மா பகவான் அவதாரத்தின் மகிமை

இன்றைய கலியுகத்தில் உலகம் முழுவதும் கடினமான பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றது. பல பெரிய அழிவுத்தாகுதல்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறது.இவை யாவும் மனிதனால் விதைக்கப்பட்டவை. இவற்றையெல்லாம் நாம் எவ்வாறு தன்னிச்சையாக சமாளிப்பது?எங்களால் முடியுமா? இதையெல்லாம் நாம் உடனடியாகச் செய்து முடிக்கமுடியாது. இவற்றை இமைப்பொழுதில் உடனடியாகத் தீர்ப்பதற்கு நம்மிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை. ஆனால், இம்மனப்போரட்டங்கள், மனக்கசப்புக்கள் அனைத்திற்கும் ஓர் சாட்டையடியாக , யாவரது ஏக்கங்களுக்கிணங்க நமக்குத் தீர்வு கிடைத்துவிட்டது. ஆன்மீகத்தின் தெளிவான உள்ளடக்கங்களைக் கற்பித்து அதனுடைய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்கும் புதிய யுகங்களையும். வரல்லற்றுச்ச்ரப்புக்களையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் யுகத்திற்கொருமுறை தனக்கும் படிப்பினைக்கும் இடையிலே உருவான பிளவுகளை மீறி தெய்வங்கள் பூமியிலே அவதாரம் செய்கின்றனர். அந்த அவதார புருஷர்களே, முக்தியீஷ்வரர்களான ஸ்ரீ அம்மா பகவான். இந்த அவதாரத்தின் மகிமை எம் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைகின்றது. இந்த திருப்பு முனையையே நாம் "சுவர்ணயுகம்" என்கிறோம். இந்த சுவர்ணயுகம் ஒன்றிலே தான் அனைவரும் சமத்துவத்துடன் ஒன்றாக இணைந்து நாம் உழைத்த கர்மாவை அறுவடை செய்யப்போகிறோம். செய்து கொண்டிருக்கின்றோம். ஏனெனில் ஸ்ரீ அம்மா பகவான் நாம் அனைவரையும் ஆன்மீக வாழ்க்கைக்கு அழைத்துச்சென்று, உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனித இனத்துக்கும் ஏற்றம், இறக்கம் இன்றி ஜீவன் முக்தியை அளித்து, அனைத்து வகையான துயரங்களில் இருந்தும் நம்மை விடுவித்து ஆனந்தத்தை அனுபவிக்கச்செய்கின்றனர். இதுவே அவர்களின் சங்கல்பம்.